Friday 3rd of May 2024 04:20:14 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா தொற்றுடன் தப்பி வந்த நபர் மன்னாரில் கண்டறியப்பட்டார்!

கொரோனா தொற்றுடன் தப்பி வந்த நபர் மன்னாரில் கண்டறியப்பட்டார்!


பேலியகொட பகுதியில் தொழில்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டிருந்த நபர் அங்கிருந்து தப்பி மன்னாரில் தலைமறைவாகியிருந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(25) மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

குறித்த நபர் கொழும்பு பேலிய கொட மீன் சந்தை பகுதியில் வேலை செய்து வந்து நிலையில் இவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு இருந்து தப்பி வந்த நிலையில் சில முன்னர் மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் குறித்த நபர் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்தார் என்ற நிலையில் குறித்த நபர் மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(25) மாலை கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்ற தகல்களுக்கு அமைவாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர் கந்தக்காடு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளார்.

குறித்த நபருடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற சந்தேகத்தில் தேடி அறியும் நடவடிக்கைகளும் இடம் பெற்று வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் மேலும் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE